நம்ம பயலுவ எல்லாம் ஏன்டா கல்யாணம்னா இப்படி தெரிச்சு ஒடுரானுகணு பாத்தா இப்பத்தான தெரியுது. என்னத்த கன்னய்யா RENJUKU "என்னத்த சொல்லி என்னத்த பாத்து (து) கேட்டு" படிங்க படிங்க
சாப்ட்வேர் படிச்ச நம்ம ஊரு பொண்ணு ஒண்ணு இருக்குது டா தம்பி கல்யாணம் கட்டிகிற வயசு வந்துருச்சு உனக்கும். தாத்தாக்கு வேர வயசு ஆயிபோச்சுணு அம்மா சொல்ல "ஏம்மா தாத்தானா வயசு அதிகமா தானாமா இருக்கும் நு சொல்ல முடியாம மன்டைய வேற மாதிரி ஆட்டுனதில அம்மா confuse ஆயி, பாத்தீங்களா பாத்தீங்களா எம்புள்ள என்ர பேச்ச என்னைக்கும்.....balance நீங்களே பிஃல் பண்ணிக்கங்க..
இந்த பயபுள்ள பேசின பேச்சே அம்புட்டு தான்..பேஃக் டு அம்மணி!!
அம்மணியின் தந்தை: பாப்பா (புரியுது மக்களே :)) படிப்ப நல்ல படியா முடிச்சுட்ட, இனி உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துட்டோம்ணா எங்க கடமை முடிஞ்ஞிரும் (உங்க கடம முடிஞ்ஞிரும் சரி அந்த பயபுள்ள வாழ்க்கையே முடிஞ்ஞிரும் ல...கேக்குது மக்களே உங்க mind voice)
அம்மணியின் தாய்: பாப்பா, கண்ணு, சாமி, தங்கம், அம்மாடி, ராசாத்தி (ஓகே, மக்களே டயர்டு ஆயிட்டிங்களா?) உனக்கு ஒரு நல்ல இஞ்சினியர் மாப்பிள்ளயா படிச்ச பையனா எலிகாப்டர் எரொப்பிலென் (first spelling correct ah adinga) ஓட்ரவனா பார்த்துடலாம்.
அம்மணி: டாடி, மம்மி, இஞ்சினியரிங் படிச்ச பையனா? அது UG தானே. நான் PG ல படிச்சிருக்கேன்.
அம்மணியின் தந்தை: அ (பேச try பண்றாறாமா?!)
அம்மணியின் தாய்: "ம்" நு ஒரு சவுண்டு
அம்மணியின் தந்தை: சரிம்மா.
அம்மணியின் தாய்: PG படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.
அம்மணி: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.
அம்மணியின் தாய்: பாப்பா, இஞ்சினியர் படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, PG மாப்பிள்ளைனா வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.
அம்மணியின் தந்தை: அ (மறுபடியும் பேச try பண்றாறாமா?!)
அம்மணியின் தாய்: "ஷ்" (இந்தம்மா பெரிய music director போல ண்ர உங்க doubt கேட்ருச்சு)
அம்மணியின் தந்தை: சரிம்மா.
அம்மணி: PG பண்ணிருக்கனும். பட் arrears வச்சிருக்கணும். (அதாகப்பட்டது மக்களே, invitation ல மாப்பிள்ளை பேருக்கு பின்னால டிகிரிக்கு மேல கோடு போட்டுருக்கணும்...புரியுதா ஜனங்களே அம்மணி யோட புத்திசாலித்தனத்த?)
அம்மணியின் தாய்: சூப்பரா இருக்கு பாப்பா. அடுத்து
அம்மணியின் தந்தை: வெளியே கடவுள், உள்ளே மிருகம் RENJUKU
பீல் பண்றார் (மனசுக்குள்ள)
அம்மணி: எனக்கு என் கெரியர்/ஆம்பிசன் தான் முக்கியம் (என்னது ambulance ஆ?)
அம்மணியின் தந்தை: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தரேன்.
அம்மணி: டாடிடி! மம்மி டாடிய பாருங்க
அம்மணியின் தாய்: %$#^&@!@#$^$&$@
அம்மணியின் தந்தை: !!! (ஆப் ஆயிட்டாருங்கோ..)
அம்மணி: நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது. நான் வேலைக்கு போகலன கூட.
அம்மணியின் தாய்: ?!?!?!
அம்மணியின் தந்தை: அற கி.மீ ஓடி போகலாமானு யோசிக்கிறார்
அம்மணியின் தாய்: சரி பாப்பா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேணும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.
அம்மணி: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன் போகாமலும் இருப்பேன். அது என் இஷ்டம்.
அம்மணியின் தந்தை: வெளங்கிரும் (மனசுக்குள்ளதான்)
அம்மணியின் தாய்: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.
அம்மணி: பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு லட்சணமா தெரியனும், ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும்.
அம்மணியின் தந்தை: மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே பாப்பா?
அம்மணி : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
அம்மணியின் தாய்: அது.... (அஜித் ணு நெனப்போ...)
அம்மணி: அப்புறம் பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.
அம்மணியின் தந்தை: உனக்கு ABCD ஒலுங்காகூட படிக்க தெரியாது..எல்லாம் நேரம்..again என்னத்த கன்னய்யா RENJUKU "என்னத்த சொல்லி என்னத்த பாத்து (து) கேட்டு" படிங்க படிங்க
அம்மணி : நாங்க இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.
அம்மணியின் தந்தை: இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வச்சு கூட படுக்க மாட்டாங்க.
அம்மணி: Last but not least. எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா
அம்மணியின் தந்தை: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.
அம்மணியின் தாய்: "ஷ்ஷ்ஷ்..." (கொஞ்சம் பலமா)
அம்மணியின் தந்தை: (பம்மறார்)
அம்மணி: இருங்க சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
அம்மணியின் தாய்: ?????
அம்மணியின் தந்தை: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற (ஏக்கமா பாக்கறார்).
அம்மணி: அதெல்லாம் இல்லை மம்மி. அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்
அம்மணியின் தந்தை மயக்கம் போட்டு விழுகிறார்...
Friday, March 18, 2011
கல்யாணம்?!
Posted by
Mr.H
at
3:00 PM
0
comments
Labels: Fun
Poll your vote
Politics is for the present, but an equation is for eternity.
- Albert Einstein
Those who say religion has nothing to do with politics do not know what religion is.
- Mohandas Gandhi
I am never going to have anything more to do with politics or politicians. When this war is over I shall confine myself entirely to writing and painting.
- Winston Churchill
Politics is not a game. It is an earnest business.
- Winston Churchill
In war, you can only be killed once, but in politics, many times.
- Winston Churchill
Politics is the ability to foretell what is going to happen tomorrow, next week, next month and next year. And to have the ability afterwards to explain why it didn't happen.
- Winston Churchill
Politics is almost as exciting as war, and quite as dangerous. In war you can only be killed once, but in politics many times.
- Winston Churchill
Politics are very much like war. We may even have to use poison gas at times.
- Winston Churchill
I was losing interest in politics, when the repeal of the Missouri Compromise aroused me again. What I have done since then is pretty well known.
- Abraham Lincoln
It has been said that politics is the second oldest profession. I have learned that it bears a striking resemblance to the first.
- Ronald Reagan
Sirji, you are talented and gifted. You see the mirror we will comb it, you order the food we will eat it, you think about the rest room we will clean it (oops, we will open it, oops we will close it blag blah), you you you it it it send me onsite.
- Disc Jockey
So, ppl who grabbed the vote?
Mr.H
Posted by
Mr.H
at
12:36 PM
0
comments
Labels: Politics
Thursday, March 17, 2011
முட்டாப்பய
"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.
அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.
Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.
"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.
"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.
"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"
"தேங்க்ஸ் சரவ்"
"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"
" "
"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"
" "
"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"
"அப்படியெல்லாம் இல்லை சரவ்"
"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"
வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.
9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்
செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.
அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.
அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.
"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"
"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"
"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"
அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.
"சரி கைய நீட்டு"
கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.
"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"
கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.
ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.
"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"
அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.
"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"
அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.
"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.
" "
"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"
அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.
அடுத்த நாள்.
ஆங்கில வகுப்பு
"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"
முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.
"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"
முறைத்து கொண்டே சென்றான் சிவா.
"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"
வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"
"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.
"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"
அமைதியாக இருந்தாள்.
"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.
"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"
"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"
"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"
அவள் கை சிவந்திருந்தது.
"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"
அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.
அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.
"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"
அவள் அழுது கொண்டே இருந்தாள்.
"இப்ப சொல்றயா இல்லையா?"
"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"
"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"
"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"
"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"
"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.
"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"
"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"
"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"
"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."
"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"
"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"
அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.
அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.
ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.
"என்னப்பா? யாரு வேணும்"
"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"
"ஆமாம். நீ யாருப்பா?"
"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"
"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"
"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.
"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"
"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"
அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.
"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"
"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"
"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"
"நான் சிகப்பு மனிதன் சார்"
"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"
" "
"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.
அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"
அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.
சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.
கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"
"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"
"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"
ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.
"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.
கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.
"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"
"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"
"இது உன் நம்பர் தானே 973654662"
"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"
"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"
கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"
மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.
................
"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.
..............
"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"
"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"
வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...
P.S. One of the collection's from Vettipayal.
Mr.H
Posted by
Mr.H
at
2:21 PM
0
comments
Labels: Short Story
Wednesday, March 16, 2011
Is it Too good to leave?! Or too good to stay?!
People struggling with problems in the relationship say this as their answers "Yes, No, May be". Neither me nor her/him see the reality of marriage but if your spouse doesn’t understand how his/her actions are affecting you – and even worse, refuses to compromise then your marriage will be difficult to rebuild.
To rise from the rock bottom, both the partners have to see how their actions (non-actions) are affecting the relationship and both of them should be willing to work on it. If your spouse refuses to accept reality, then you have to decide if you want to stay in your marriage the way it is or just call it quit.
You know how she/he sees things are, but doesn’t care or rather being unpredictable some (most) of the times. The key is communication, but if your partner doesn’t care how you feel or whether the relationship is healthy, then perhaps it’s a sign your marriage is riding on one way. Few ppl quote, my partner got "it” but “it” doesn’t matter to them anymore.
Am I connected with my spouse? When on the initial days of marriage, you probably felt understood, heard, connected, give and take, loved with your partner. Time passes, and on and on AND ON the stress kicks you badly to take a toll and you find in returns with an empty heart/empty soul that points you’re not connected anymore. This may not be necessarily a sign your marriage is over it just means you need to make the time and effort to reconnect.
But no matter whether it is the beginning of relationship or being lived together for few yrs. When you find the emptiness travels with you for quite sometime then your relationSHIP is driving different and you need to identify something or the other.
Have you ever been depend on your spouse? X say 'yes, of course' but why do you think that it is not working out? The reason for this could be different visions. Where is the emotional bond between us? Being single is better than mingle? I would say "No, that's a place where you admit yourself hidden". Each person are depend on each other both physical and emotional. When one comes down but the other focus on the topic of argument, opting instead to bring up past mistakes or reopen old wounds, then your marriage may be leaning towards “over.”
Letting go of someone you love isn’t something you do once and poof! You’re free, healed, and happy rather! Instead, letting go is a journey peppered with steps forward and steps backward, good days and bad days, peaks and valleys.
Mr.H
Posted by
Mr.H
at
2:02 PM
0
comments
Labels: Relationship